27 ஏப்ரல், 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக