28 ஏப்ரல், 2011

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக மட்டு.மாநகர சபையில் கண்டனத்தீர்மானம்



ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இன்று காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் கூடிய மாநகர சபை உறுப்பினர்கள் கண்டனத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி மற்றும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினரும் பிரதி மேயருமான ஜோர்ஜ் பிள்ளையும் இவமர்விற்கு சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக