28 ஏப்ரல், 2011

போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. நேற்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதி ராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, இலங் கை யில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என் பதை தி.மு.க. வலியுறுத்துகிறது. அங்கு வாழும் மக்களிடையே சமத்துவ நிலை ஏற் பட வழி வகுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடந்த போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டு அதற்குக் கார ண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச ஆணையம் இந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் று தெரிவித்தார்.

தனி ஈழமே தி.மு.க.வின் குறிக்கோள்: இதற்கு முன்னதாக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தனி ஈழமே தி.மு.க.வின் குறிக் கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல ங் கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடியாக இலங்கை விவகாரம்:

சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு, தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வரு வதற்கு பதிலடியாக, தி.மு.க. இலங்கை விவகாரத்தை கையில் எடு த் துள்ளதாகவே தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக இந் திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியி ரு ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக தி.மு.க., போராட்டங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக