27 ஏப்ரல், 2011


அறிக்கையை நாம் நிராகரிப்பதனால் உள்ளடக்கம் குறித்து அக்கறையில்லை
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளமையை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலனித்துவ முயற்சி என்று கூறலாம்.

இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரி மையும் இல்லை என்று ஸ்ரீலங்கக்ஷி சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கம் குறித்து பேசவிரும்பவில்லை. எனினும் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் அழகப்பெரும மேற்கண்ட விடயங்களை கூறினார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றோம்.

அதாவது இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை.

ஆனால் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். ஆதாரமற்ற வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும். நாங்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றோம்.

நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தற்போதுதான் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக