27 ஏப்ரல், 2011

போர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியம்: நவநீதம்பிள்ளை வலியுறுத்து

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச மற்றும் விடுதலைப் புலிகளினால் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட 3 பேரைக்கொண்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விசாரணை அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்தினை மிகவும் பாதித்திருப்பதாகவும் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக