30 ஏப்ரல், 2011

ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு: பர்ஹான் ஹக்

மே தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக இலங்கை மக்களின் எதிர்ப்பை காண்பிக்கும்வகையில் மே தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டிருந்தது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாளாக மே தினம் அமைய வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே ஐ.நா.வின் பேச்சாளர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐ.நா. அமைப்பின் பணிகள் எவ்வித தடங்கல்களும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

2010ஆம் ஆண்டு யூலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதைக் கருத்தில்கொண்டு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகங்களின் வழமையான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கத் தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளபோதிலும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக மகிழ்ச்சியடைவதாக இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளது. இதேவேளை மேதினத்தன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ, கிளர்ச்சிகளையோ நடத்தும் எண்ணம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார். நிபுணர் குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணமென்ற ரீதியில் இலங்கை அரசாங்கம் பார்க்கவில்லை என்றும் அவர் இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.


................................................................................................................................................................................

கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் 03
கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் 03 32. எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தோற்றுவித்து, இரா ணுவ, அரசியல் மற்றும் சிவில் இலக்குகளுக்கு எதிராக அதனைப் பிரயோகித்தது. இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி (1991) அத்துடன் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1993) மற்றும் அதிக எண்ணிக்கையிலான இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிதவாதப் போக்குடைய தமிழ் அரசியல் தலைவர்களின் கொலைகளுக்கு ஆண் மற்றும் பெண் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுதாரிகள் பொறுப்பாகவிருந்தனர். அநேகமான சந்தர்ப்பங்களில் பல சிவில் பிரஜைகளின் உயிர்களைப் பறித்த பொருளாதார மற்றும் சமய இலக்குகள் மீதும் அது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டது. எல்.ரி.ரி.ஈ. புறந்தள்ளும் அரசியலைப் பின்பற்றியதோடு, 1990 ஆம் ஆண்டில் வடக்கில் தம் வீடுகளில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தியதோடு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தது. தமிழ் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அதிகமாக வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலை எல்.ரி.ரி.ஈ.பிரயோகித்தது. வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதில், சிறுவர்கள் சிறுமியரை உள்ளிட்ட வயது குறைந்தவர்களை படைவீரர்களாகப் பாவிப்பதில் எல்.ரி.ரி.ஈ. ஈடுபட்டதும் தெரிந்த விடயமே. அதன் நடைமுறை காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஐக்கிய இராஜதானி மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஆகியவற்றை உள்ளிட்ட நாடுகள் இவ்வமைப்பை தடை செய்ததோடு, 2001 செப்டெம்பர் 11 இன் பின்னர் தடை செய்வது மேலும் தீவிரமடைந்தது.

33. 1990ஆம் ஆண்டுகள் தொடக்கம்

மே 2009 வரை, எல்.ரி.ரி.ஈ. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய நிலப்பரப்பினை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்ததோடு, அரசாங்கப் படையினரும் எல்.ரி.ரி.ஈ.இனரும் பிரதேசத்தின் கட்டுப்பாட்டுக்காக போட்டியிட்ட போது, நாளடைவில் இந்த எல்லைக் கோடு மாற்றமடைந்தது. நடப்பிலுள்ள ஒரு தேசத்தை அது செயற்படுத்தி தானே அது என்ற தோற்றத்தை முன்வைக்க முனைந்தது. இதனை நோக்காகக் கொண்டு நன்கு வடிவமைக்கப்பட்ட சர்வதேச உபாயம் ஒன்றை அது அபிவிருத்தி செய்ததோடு, தன் கட்டுபாட்டில் உள்ள பிரதேசத்தில் அதன் காவல் அமைப்பு, சிறைச்சாலைகள், நீதி மன்றங்கள், உள்வரவுத் திணைக்களம் வங்கிகள், மற்றும் சில சமூக சேவைகள் ஆகியவற்றை நிறுவியது. தரை, வான் மற்றும் கடல் திறன்கொண்ட முன்னேறியதொரு இராணுவத்தையும் அது கட்டியெழுப்பியதோடு, விரிவானதொரு உளவு பார்க்கும் அமைப்பின் உதவியுடன் கெரில்லா மற்றும் பாரம்பரிய நடைமுறைகளையும் மேற்கொண்டது.

34. வன்முறை மற்றும் அரச அடக்குமுறை காரணமாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் மற்றும்“ ஏனையோர் சிறந்த பொருளாதார சந்தர்ப்பங்களுக்காக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழ் சனத்தொகை உலகின் பல பாகங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரை 1980ஆம் ஆண்டுகள் முதல் வளர்ச்சியடைந்து புலம்பெயர்ந்தவர்கள் யுத்தம் நடைபெற்ற காலம் பூராவும், அவர்களுள் சிலர் ஏன் ஏது என்று கேட்காது எல்ரிரிஈ இனருக்கு ஆதரவு வழங்கி, யுத்தம் நடைபெற்ற முழுக்காலப்பகுதியிலும் நிதிகளை வழங்கி, எல்ரிரிஈ தவறிழைக்கவில்லை என வாதாடி முக்கியதொரு பங்கினை வகித்தனர். ஆயினும், ஆதரவு அனைத்தும் சுயமாகவே வழங்கப்படவில்லை. இலங்கைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான தமிழ் அகதிகள் வாழும் நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தலை உள்ளிட்ட அதன் நடைமுறைகளை விரிவாக்கி, அதனை தனிநாட்டுக்கான தமிழ் மக்களின் அபிலாசை என வருணனை செய்து அதனை அடைவதற்கான வழியாகப் பிரயோகித்தது. அது எவ்வித விமர்சனத்தையும் சகிக்காததோடு, எல்ரிரிஈ இன் வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்புவதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அளிக்கவில்லை.

(14) ஆ. சட்டத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் படிப்படியாக அழிந்துபோதல்

35. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நாட்டின் கூறுபடாத சுபாவத்தை வலியுறுத்துவதோடு, தேசத்தின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி ஆக பதவி வகிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு பரவலான மற்றும் குவிசார்ந்த அதிகாரங்களை வழங்குகிறது“ மேலும், தனது வரையறைக்கு உட்பட்டவாறு ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுக்கும் தலைமை தாங்கலாம். தற்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு, நிதி மற்றும் திட்டமிடல், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய ஐந்து அமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவுள்ளார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றம் ஆகியவற்றுக்கான தலைவர்களையும் நீதிபதிகளையும் நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அரசியல் யாப்பு நிலைநாட்டுகிறது. மேலும், நெருங்கிய குடும்பத்தினரை ஜனாதிபதி நியமிப்பதற்கான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதேர்டு, அத்தகைய தெரிவுகளைப் பாவிப்பதால், தற்போதைய அரசாங்கம் உறவினர்களுக்குச் சலுகை அளிக்கிறது என்ற விமர்சனத்தை எதிர்நோக்குகிறது.

36. அவசரகாலச் சட்டத்தின் கீழான நீடிக் கப்பட்ட காலப்பகுதிகள், அரசியல் யாப்பு அனுமதித்த அவசரகால ஒழுங்குவிதிகளைப் பாவித்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தல், அது போன்று நீதித்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அரசியல் ஈடுபாடு அதிகரித்தல், அத்தோடு சுயாதீனமாகத் தட்டிக் கேட்பதை நலிவடையச் செய்தல். 1989 இல் சிறியதொரு இடைவெளியைத் தவிர 1983 முதல் 2001 வரை மற்றும் மீண்டும் 2005 முதல் இன்று வரை அவசரகாலச் சட்ட ஆட்சி அமுலில் இருந்து வருகிறது. ஏனைய விடயங்களுள், தற்போது அமுலில் உள்ள அவசரகால ஒழுங்குவிதிகள் 1979 ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்துடன் சேர்ந்து, அரசாங்கத்துக்கு அசாதாரணமான அதிகாரங்களை வழங்குவதோடு, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மற்றும் உரிமைகள் மீறல்கள் பற்றி ஆராய்வதற்கான நீதி மன்றங்களின் ஆளுமையைக் கட்டுப்படுத்துகின்றன. ஏனைய சட்டங்களும், குறிப்பாக 1982ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சட்டவிலக்கு உரிமைச் சட்டம் (1977 ஆகஸ்ட் முதல் 1988 டிசம்பர் 16 வரைக்கும் ஏற்புடைத்தான) பாரிய உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கத்தின் கடமையை மிகுந்த அளவில் நலிவடையச் செய்துள்ளன. சட்டத்தை அமுல் செய்வதற்காக அல்லது வேறு விதமாக பொது மக்களின் அக்கறைக்காக நல்ல நோக்குடன் சட்டப்படி அல்லது சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் எந்தவொரு அமைச்சர், இராணுவ அதிகாரி அல்லது அவர்கள் பணிப்பின் கீழ் செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதை இது தடை செய்துகிறது. தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையை முறைசார்ந்ததாக்குவதன் மூலம், சட்டவிலக்கு உரிமைச் சட்டம் பயங்கரமானதொரு முன்மாதிரியை வழங்குகிறது.

37. அநேகமாக சூத்திரகாரர்கள் தண்டிக்கப்படாத காணாமப்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமைகள் மீறல்கள், அத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எதிரான முறைசார்ந்த சட்ட மற்றும் அரசியலமைப்பின் கீழான பாதுகாப்புக்கள் இருந்த போதிலும், நேருவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கு இந்நடைமுறைகள் உதவியுள்ளன. சட்டத்திலான பாதுகாப்பு இருந்த போதிலும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியலைப் பயன்படுத்தல் ஆகியவற்றை உள்ளிட்ட பாலியல் சார்ந்த வன்முறைகளும் நேர்ந்துள்ளன. வலுக்கட்டாயமான காணாமல்போதல்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய தொடர்ச்சியான அமைப்பினை ஆராய்வதற்கான பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், சில சந்தர்ப்பங்களில், உண்மையைக் கண்டறியும் முக்கிய தேவையை நிறைவு செய்துள்ளன. ஆயினும், இவை எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது அல்லது மீறல்களின் முறைசார்ந்த சுபாவம் பற்றி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவில்லை. இந்நோக்கில் பார்க்கும் போது, தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமைக்கு எதிராகச் செயற்படுவதற்கு, உண்மையை நிலைநாட்டுவதற்கு அல்லது நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுக்கள் பயனுறு கருவியாக அமையவில்லை.

38. அரசாங்க நிறுவனங்களைப் பலப்படுத்தி அவற்றின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் 2001 இல் 17ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு வழிகோலின. ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியல் யாப்பினூடாக கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்ட அது பொலிஸ், தேர்தல்கள், மனித உரிமைகள், லஞ்சம், நிதி மற்றும் பகிரங்கச் சேவை ஆகியவற்றுக்கான ஆணைக்குழுக்களின் நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன அரசியல் யாப்புச் சபையை ஏற்படுத்தியது. மேலும், ஏனையவற்றுக்குப் புறம்பாக, உயர் நீதித் துறை, நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் நியமனங்களை இச்சபை அனுமதிக்க வேண்டியிருந்தது. அண்மைக் கால ஜனாதிபதிகள் எவ்விதப் பாரிய விளைவுமின்றி அதனைப் புறக்கணிக்க முடியுமென்பதால் இத்திருத்தம் ஒப்பீட்டளவில் பயனற்றதாகியுள்ளது. 2010 செப்டெம்பரில் பாராளுமன்றம் 18ஆம் திருத்தத்தை நிறைவேற்றியது. அது 17ஆம் திருத்தத்தை பயனற்றதாக்கியதோடு, அதன் சுயாதீனக் கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை அகற்றி ஜனாதிபதியின் பதவிக்கால மட்டுப்படுத்தல்களை இல்லாமலாக்கியது.

39. மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற யுத்தம் காரணமாக சகல பிரஜைகளின் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டு, சுயாதீன நிறுவனங்கள் தரமிழந்து சட்டத்தின் நல்லாட்சி நலிவடைந்தது. எல்ரிரிஈ இக்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்கு அரசாங்கம் தயாராகிய போது, மனித உரிமைகள் மேலும் பாதிப்படைந்ததோடு, பல நடவடிக்கைகள் காரணமாக சுயாதீன செய்தி அறிக்கை விடுத்தல், கருத்து வேறுபாடு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குக் கூட மேலும் பாரிய கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. 2006 ஆரம்பத்தில் இருந்து, இராணுவ நடவடிக்கைகள் பற்றி அறிக்கை விடுக்கும் ஊடகவியலாளர்களுக்கு மேலும் கட்டுப்படுத்தும் வழிகாட்டல்களை பாதுகாப்புச் செயலாளர் விடுத்ததோடு, நடவடிக்கைகளை எதிர்மாறாகச் சித்தி ரிப்பது ஒரு குற்றச் செயலாக ஆக்கப்பட்டது. பிரபல்யமான தாக்குதல்கள், காணாமல்போதல்கள் மற்றும் கொலைகைளை உள்ளிட்ட ஊடகங்கள் மீதான மேலதிக தாக்கங்கள், அதிக அளவிலான சுய தணிக்கைக்கு வழிவகுத்தது. இனங்காணப்படாத மூலங்களில் இருந்து உள்நாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, அதன் விளைவாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர். விசா மறுத்தல் அதிகரிப்பு மற்றும் இரத்துச் செய்தல் சர்வதேச பணியாட்டொகுதியினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை அச்சத்துக்குள்ளாக்கியதோடு, சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தம் நிலைமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம்.

(16) யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை நோக்கி

40. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களாக மாறுவதற்கான காட்சியை தோற்றுவிப்பதில் குறைந்த பட்சம் மூன்று மேலதிக காரணிகள் முக்கியமானவையாகும்.

41. முதலாவதாக, இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் நோர்வையை அனுசரணையாளர்களாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டபோது 2000 ஆம் ஆண்டில் குறுகிய காலப்பகுதியொன் றிலான சமாதானச் செயற்பாடு ஆரம்பித்தது. பெப்ரவரி 2002 இல் தரப்பினர் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றுக்கு இணங்கியதோடு, நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்பதாக ஆண் பெண் பாகுபாடு பற்றிய உப குழுவொன்றை நிறுவுவதன் மூலம் எல்ரிரிஈ இன் பக்கத்தில் இருந்து மற்றும் தெற்கில் இருந்து பெண்கள் கலந்துரையாடுவதை உள்ளிட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. டோக்கியோ இணைத் தலைமைகள் ஊடாக (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு) அரசியல் முன்னேற்றத்தைக் கண்காணித்த மீளிணக்கப்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய டோக்கியோ மாநாட்டின் அடிப்படையில் (2003) சர்வதேச சமூகம் இச்செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்கியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன சர்வதேச அமைப்பான இலங்கைக் கண்காணிப்புத் தூதுக்குழு, அரசாங்கம் அதனைக் கலைத்து உத்தியோகபூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த 2008 ஜனவரி வரை கள மீறல்களைக் கண்காணித்து வந்ததது. ஏப்ரல் 2003 இல் எல்.ரி.ரி.ஈ.ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. அதன் பின்னர் போர் நடவடிக்கைகள் 2006 இல் மீண்டும் ஆரம்பித்ததைத் தொடர்ந்தும் போர் நிறுத்த ஒப்பந்தம் பெரும்பாலும் பெயரளவில் மாத்திரம் இருந்த போதிலும் அது தொடர்ந்தும் உத்தியோகபூர்வ ரீதியில் இருந்ததால் இலங்கை கண்காணிப்புத் தூதுக்குழுவின் நடைமுறையிலான சர்வதேச பிரசன்னத்தை அது உறுதி செய்தது.

42. தொடர்ச்சியான இனவாதப் பிரிவு மற்றும் சகிப்புத் தன்மை இன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற இரு தரப்பினரிடையேயும் காணப்பட்ட தீவிரப் போக்கு நீண்ட காலமாக இருந்து வந்த மோதலைத் தீர்ப்பதற்கான முன்னைய சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பட்டியலில் இவ்வாறாக இந்த சமாதானச் செயற்பாட்டையும் விரைவில் சேர்த்து விட்டது. கடுந்தீவிரப்போக்குடைய சிங்களத் தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை எதிர்த்தனர்“ மேலும், ஏப்பிரல் 2003 இல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எல்.ரி.ரி.ஈ. எடுத்த முடிவும் வடகிழக்கில் இடைக்கால சுயாட்சி அதிகார சபை ஒன்றை அமைப்பதற்கான அதன் ஒரு தலைப்பட்சமான பிரேரணையும் சிங்கள தேசியவாத எதிர்ப்பினை மேலும் உக்கிரமடையச் செய்து, அரசியல் கட்சிகளின் ஆழமான தேசிய கூட்டணியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை திடீரெனத் தோற்றுவித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் 2005 இல் நடைபெற்ற தேர்தல்களில் சுமாரான வெற்றியை ஈட்டியதோடு, இறுதி யுத்தத்தை மேற்கொள்வதற்கான அரசியல் ஆதரவையும் அது வழங்கியது.

(17)

43. இரண்டாவதாக, மார்ச் 2004 இல் பொதுவாக கேணல் கருணா என்றழைக்கப்படும் எல்ரிரிஈ இன் கிழக்குத் தளபதி, விநாயகமூர்த்தி முரளீதரன், சுமார் 5,000 போராளிகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈ. இல் இருந்து பிரிந்து சென்றார். பின்னர் அவர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி) அமைப்பினை அமைத்து, அது துணை இராணுவப் பிரிவொன்றைப் பேணும் அதே வேளையில், பதவியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராகச் சேர்ந்தார். இப்பிளவு எல்.ரி.ரி.ஈ. இக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எல்ரிரிஈ இன் தலைமைத்துவத்தில் கருணாவிற்கு இருந்த இடத்தைக் கவனிக்குமிடத்து, மிகவும் இரகசியமான இவ்வமைப்புப் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்ததோடு, இறுதி யுத்தத்திற்குத் தயாராகும் போது அரசாங்கம் அதனைப் பயனுறு விதத்தில் பாவித்துக் கொண்டது. மேலும், எல்.ரி.ரி.ஈ.பற்றி அதிருப்தி கொண்டிருந்த ரி.எம்.வி.பி.யி.ன் துணை இராணுவப் படைகள், அத்துடன் முன்னாள் தமிழ் போராளிக் குழுக்களின் உறுப்பினர்களை எல்ரிரிஈ க்கு எதிரான இராணுவ நடவடிக்கையிலும் தமிழ் பொதுமக்களுக்கு இடையே உளவு பார்க்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடுத்தியது.

44. மூன்றாவதாக, சர்வதேச காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன. பயங்கரவாத அமைப்புக்களுக்கு மற்றும் அவர்களின் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் நாடுகளுடன், "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம்' என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மற்றும் ஏனைய மேற்கத்திய அரசாங்கங்கள் ஒத்துழைப்பதற்காக எடுத்த முயற்சி எல்.ரி.ரி.ஈ. இக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டிருந்தது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்ட எல்.ரி.ரி.ஈ. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் மேலும் தனிமையாக்கப்பட்டு வந்தது. தமிழரான இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் 2005 இல் படுகொலை செய்ததானது இவ்வமைப்பின் சர்வதேச பின்புலத்துக்கு இறுதி அடியாக இருந்திருக்கலாம். இச்சூழலில் எல்ரிரிஈ க்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் பங்காளர் உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டது.

45. 2005 ஆம் ஆண்டில் நடந்தேறிய தேர்தல்களின் பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளைத் தாம் மதிக்கப் போவதாக அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. இனரும் உறுதியளித்த போதிலும், 2006 ஆகஸ்டில் மீண்டும் பாரிய அளவிலான ஆயுதந்தாங்கிய போராட்டம் ஆரம்பிக்கும் வரை இரு தரப்பினரும் தமது இராணுவச் சீண்டல்களைத் தொடர்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்கும் மாவில் ஆறு நீர்த்தேக்கத்தின் அணைக் கதவுகளை எல்ரிரிஈ மூடியதும், எல்.ரி.ரி.ஈ. இன் பிடியில் இருந்து கிழக்கு மாகாணத்தை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படைவீரர்களை தாக்குதல் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுத்தியது. கருணாப் பிரிவினரின் உதவியுடன், சுமார் இரு தசாப்தங்களின் பின்னர் முதற்தடவையாக 2007 ஜூலை மாதத்தில் அரசாங்கம் முழுமையாக கிழக்கு மாகாணத்தைத் தன் வசப்படுத்தியது.

(18)

46. கிழக்கு மாகாணத்தில் மற்றும் 2008 ஜனவரியில் வட மாகாணத்தின் சில பகுதிகளில் அரசாங்கப் படையினர் அடைந்த இராணுவ வெற்றி காரணமாக எல்.ரி.ரி.ஈ. வன்னிப் பிரதேசத்தில் மாத்திரம் பாரிய இடப்பரப்பை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க முடிந்தது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களுள், தமது நடைமுறைத் தலைநகரான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்கள்“ எல்.ரி.ரி.ஈ. இன் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. வவுனியாவின் வட பகுதி, வடமேற்கு மன்னார் மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சிறிய சில நிலப்பரப்புக்களையும் அது தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

47. கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றியினால் உற்சாகமடைந்த அரசாங்கம், கிட்டத்தட்ட இரு வருடங்களாக மேற்கொண்ட போர்த் தந்திரத் தயாரிப்புக்களின் பின்னர் 2008 ஜனவரி 16ஆம் திகதி முழு அளவிலானதொரு இராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், டோக்கியோ இணைத் தலைமைகள் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கான மற்றும் இராணுவத் தீர்வொன்றைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்த போதிலும், அதன் இடப்பரப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் உரிமையையும் ஏற்றுக் கொண்டன. 2008 பெப்ரவரி நடுப்பகுதியளவில், நாடு பூராவும் தற்கொலைத் தாக்குதல்களை எல்ரிரிஈ தீவிரப்படுத்திய போது யுத்தப் பிரதேசத்துக்கு வெளியேயுள்ள பொதுமக்கள் மீதான யுத்தத்தின் தாக்கம் அச்சுறுத்தும் நிலையை அடைந்தது. அரசாங்கத்தின் வான் குண்டுத் தாக்குதல்களும் ஆழ ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளும் யுத்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை மேலும் தாக்கமுறச் செய்தன. 2008 செட்டெம்பரில் கிளிநொச்சியை நோக்கிய அதன் இறுதி இராணுவத் தாக்குதலை அரசாங்கம் மேற்கொண்டது. ஐஐஐ. குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை

48. அதன் ஆணைப் பிரகாரம், செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக "குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையைக் கவனத்துக்கெடுத்து' யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது (செப்டெம்பர் 2008 மே 2009) மற்றும் அதனை உடனடுத்து நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி இப்போது குழு கவனம் செலுத்துகிறது. குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையே குழு பொறுப்புக்கூறல் பற்றி வழங்கும் ஆலோசனையின் இயல்பை நிர்ணயிக்கிறது. அத்தியாயம் ஐஏ இல், இம்மீறல்கள், நிரூபிக்கப்படின், சர்வதேச சட்டத்தை மீறியதாக அமையுமா என்பதை நிர்ணயிப்பதற்காக இக்குற்றச்சாட்டுக்களை சட்டக் கண்ணோட்டத்தில் குழு சீர்தூக்கிப் பார்க்கிறது.

(19)

அ. குற்றச்சாட்டுக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான முறைமை

49. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கவனமாக ஆராய்ந்து அவற்றின் உண்மையை எடைபோடுவதின் அடிப்படையில் குழுவின் மதிப்பீடு அமைந்துள்ளது. எழுத்து மூலமான தகவல்கள் மற்றும் பல்வேறு நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றை குழுவின் பரிசீலனை உள்ளடக்கியது.

அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு முகவர்கள், திணைக்களங்கள், நிதியங்கள், அலுவலகங்கள் மற்றும் ஐ.நா. வேலைத் திட்டங்கள், ஏனைய அரசாங்கத்துக்கிடையிலான அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அத்துடன் இலங்கை பற்றிய நிபுணர்களை உள்ளிட்ட தனி நபர்களினால் எழுதப்பட்ட ஏனைய விவரணங்கள் ஆகியவற்றை எழுத்து மூலமான மூலங்கள் கொண்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக