30 மார்ச், 2010

அறிவிப்பின்றி நீர் விநியோகம் நிறுத்தம் : மன்னார் மக்கள் சிரமம்




மன்னாரில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் விநியோகம், எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்படுகிறது.

இதனால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பணத்தைச் செலவிட்டு வீடுகளுக்கு இணைப்புப் பெற்றிருக்கின்றனர். எனினும் கடந்த 03 தினங்களாக, நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மன்னார் வாழ் மக்கள், நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் குடி நீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக