30 மார்ச், 2010

17 இந்தியருக்கு தூக்கு





துபாய் : பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்ததற்காக 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சார்ஜாவில் அல்&ஜாஜா என்ற பகுதியில் பல்வேறு நாட்டினர் தங்கும் தொழிலாளர் முகாம் ஒன்று உள்ளது. இங்கு சட்டத்திற்கு மாறாக மதுபானம் விற்பனை செய்ததில் இந்தியர்களுக்கும் & பாகிஸ்தானியர்களுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில் இந்தியாவை சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த 4 பேரை சுற்றிவளைத்து தாக்கியுள்ளது. இதில் ஒருவர் பயங்கர காயங்களுடன் மயங்கி விழுந்து இறந்துள்ளார். மற்ற மூவரும் காயங்களுடன் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 17 முக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் போதுமான ஆதரங்கள் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபற்றிய வழக்கு சார்ஜாவின் ஷரியா நீதிமன்றத்தில் நீதிபதி யூசும் அல் ஹமாதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். பின்னர் கொலை குற்றவாளிகளான 17 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் துபாயில் ஒரு கொலைக்காக 17 பேர் தூக்குத் தண்டனை பெறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக