30 மார்ச், 2010

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி: இந்தியா கவலை





புதுதில்லி, மார்ச்.30: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்குவது கவலைக்குரிய விவகாரம் என இந்திய விமானப்படைத் தளபதி பி.வி.நாயக் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை அளிப்பது கவலைக்குரியது என்பதை இந்தியா அறிந்துவைத்திருப்பதாகவும், இந்தியாவின் கவலையை ஒபாமா நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நாயக் தெரிவித்தார்.

தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக பாகிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான எஃப்ட்16 போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட போர்க் கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது.

அமெரிக்கா வழங்கும் இத்தகைய போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக