30 மார்ச், 2010

21 குழந்தைகளின் உடல்கள் மீட்பு : கிழக்குச் சீனாவில் சம்பவம்




கிழக்குச் சீனாவின் ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து 21குழந்தைகளின் உடல்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்டெடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தைகளின் உடல்கள் பைகளுக்குள் போடப்பட்டுக் கட்டப்பட்டிருந்ததாகவும் அச்செய்தி தெரிவித்தது.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் ஷென்டொங் மாகாண வைத்தியசாலையிலுள்ள எட்டு குழந்தைகளின் உடல்கள் அந்தப் பையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியசாலை உயர் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அங்குள்ள செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

ஆற்றங்கரையை அண்டிய கிராமப்பகுதி மக்களிடம் சீனத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்தி வருகின்றன.

தனியார் வைத்தியசாலை ஒன்றைச் சேர்ந்த குழந்தைகளே இவ்வாறு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டுள்ளன என்று பிரத்தியேகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக