30 மார்ச், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் பயணம்




எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக எதிரிவரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் செல்ல உள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக தனது விஜயத்தை ஒத்திவைத்திருந்தார். எனவே யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்றும் ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக