31 மார்ச், 2010

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்




எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் செயலகம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதுடன், அச்சிடப்பட்ட 22 மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகளும் தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி கடந்த 4 ஆம் திகதி அரசாங்க அச்சகத்தில் ஆரம்பமாகின. 29 ஆம் திகதி அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் சற்று நெருக்கடி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக