29 மார்ச், 2010

பொன்சேகாவின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனோமா பொன்சேகா தெரிவிப்பு




இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைப்பெற்ற ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அனோமா பொன்சேகா இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் சரத்பொன்சேகா தற்போது இருமல் மூலம் பாதிக்கபட்டுள்ளதாகவும், இவ்வாறான நோய்கள் வரக்கூடாது எனவும், இந் நோயினால் தனது கனவர் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக