31 மார்ச், 2010

யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்


யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம் : வ.மா. ஆளுநர்
யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவை ஒன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச ஊழியர்கள் சிரமமின்றி யாழ்ப்பாணம் சென்று வர முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு, பரந்தன், ஜயபுரம் ஆகிய இடங்களைத் தாண்டி வருவதலேயே இந்தக் காலதாமதம் ஏற்படுகிறது.

எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு, வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்தப் படகுச் சேவை மூலம் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக