30 ஆகஸ்ட், 2010

மீள்குடியேறிய மக்களுக்கு லிபிய அமைப்பின் கிளை உதவி

லிபியாவின் சர்வதேச இஸ்லாமிய அமைப்புப் பணியகத்தின் இலங்கைக் கிளையினர் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், பள்ளிவாயல்கள் மற்றும் பாடசாலைகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக வடமாகாணம் சென்றனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, நயினாதீவு, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்தனர்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மீள்குடியேறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை மேற்படி அமைப்பினர் வழங்கினர்.

இவ்வைபவத்தில் அஷ்ஷேக் எம்.இஸட்.சிபார், நவாஸ் மௌலவி, அஷ்ஷேக் கமருஸ்ஸமான், ஆர்.கே.அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக