31 ஆகஸ்ட், 2010

அதிகாரம் உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் - ஜனாதிபதி

அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதிகாரம் நிரந்தமற்றது, அதிகாரங்கள் மூலம் கிடைக்கபெறும் பிரதிலாபங்கள் தொடர்ந்து நீடிக்குமா? என்பது சந்தேகமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது அரச சேவையாளர்கள் பொறுப்;புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்மால் முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள், அரச ராஜதந்திர முறையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச சேவையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவார்களானால், பல்வேறு இன்னல்கள்களுக்கும் தண்டனைக்கும் முகங்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக