31 ஆகஸ்ட், 2010

சீனாவில் நிலநடுக்கம்; 7300 வீடுகள் சேதம்; 14 பேர் காயம்




சீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் ஆகிய 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து 7,354 வீடுகள் சேதமடைந்தன. 122 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி 14 பேர் காயம் அடைந்தனர். யுன்னான் மாகாணத்தில் குயாஜியோ பகுதியில் பெரும்பாலான ரோடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.

இந்த ஆண்டு சீனாவில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குயின்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2800 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக