27 அக்டோபர், 2009

அரச வங்கிகள் கடன் வட்டி வீதங்களை 8 - 12 வீதம் வரை குறைக்க வேண்டும் - ஜனாதிபதி பணிப்பு













அரசாங்க வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டி வீதங்களை 8 12 வீதம் வரை குறைக்குமாறு நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைமை அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் இதுவரை காலமும் 15% முதல் 22 % வரை அறவிடப்பட்ட 8 வீதத்திற்கும் 12 வீதத்திற்கும் இடையில் அறவிடப்படும் இந்த நடைமுறை நாளை புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரச வங்கிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரச வங்கிகளின் பிரதானிகளுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வட்டி வீதத்தை குறைப்பதன் மூலமாக கடன்பெறுவோர் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதுடன் தவணைகளும் குறைவடையும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயம், சுற்றுலாத்துறை, கைத்தொழில் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட நடுத்தர துறைகளான நிர்மாணத்துறைகளை மேம்படுத்தவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக