27 அக்டோபர், 2009



மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை
நாடாளுமன்ற - ஜனாதிபதி தேர்தல்கள் ஒரே தினத்தில் : அரசு அறிவிப்பு



தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தத் தீர்மானிக்கப்படுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது


மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம் திகதியன்று மாந்தை மேற்குப் பகுதியில் மக்கள் மீள குடியமர்த்தப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இம்மக்களின் நலன்கருதி உடனடியாகப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பஸ் ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.நாளாந்தம் மன்னாரில் இருந்து காலை 8.00 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் இரண்டு சேவைகள் இடம்பெறுகின்றன. இப்பஸ் சேவை உயிலங்குளம் சோதனைச் சாவடியூடாக அடம்பன் சென்றடையுமென தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக