30 அக்டோபர், 2009

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு நவம்பர் 03ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது-

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்தாபித்துள்ள பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் நவம்பர் 03ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்ரீஜயவர்தனபுர நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெறவுள்ளதாக ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஐக்கிய தேசிய முன்னணியின் பத்து அரசியல் கொள்கைகள் அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். புதிய கூட்டணியில் இணையும் அரசியல் கட்சித் தலைவர்களிடையிலான சந்திப்பு இன்றுகாலை இடம்பெற்றதையடுத்து மேற்குறித்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக