29 அக்டோபர், 2009

நாட்டைவிட்டு வெளியேறுகிறார் நிஷாந்த முத்துஹெட்டிகம
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாளம் விஜயம்










ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது,நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தென்மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நிஷாந்த முத்துஹெட்டிகம நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளார் என சற்று முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அங்கிருந்து அவர் கருத்து தெரிவித்த போது,

நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருப்பினும் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்து விட்டேன். சுதந்திரமாக வாழ்வதற்காகவே நான் நாட்டை விட்டு வெளியேறுகின்றேன். இது வரை வாழ்ந்த அரசியல் வாழ்க்கை போதும்" என்று தெரிவித்தார்.

இவர் லண்டன் செல்கிறார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக