30 அக்டோபர், 2009

முகாமிலுள்ள இடம்பெயர்ந்தோர் தொகை 1லட்சத்து 79ஆயிரமாக குறைப்பு-

வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை 1லட்சத்து 79ஆயிரமாக குறைத்துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியா அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியமர்வுக்காக அனுப்பி வருகின்றோம். இப்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்கள். ஏனைய மாவட்டங்களான மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மக்களைப் படிப்படியாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் இதுவரை அகதிமுகாம்களில் இருந்தவர்கள் தற்போது மீளக் குடியமர்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தரவுகளின்படி தற்போது அகதி முகாம்களிலுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 79ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அரசஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக