29 அக்டோபர், 2009

அரசுடன் மென்மை போக்கை கடைப்பிடிக்கின்றன தமிழ்கட்சிகள் என்று குற்றஞ்சாட்டுகிறார் முன்னைநாள் மீன்பிடி அமைச்சு ஆலோசகர் சுரேஸ் பிரேமசந்திரன்!


தமிழ்கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை கண்டிக்காமல், மென்மை போக்கை கடைப்பிடிப்பதாக முன்னைநாள் மண்டையன் குழுவின் தலைவரும், பின்னர் மீன்பிடி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்தவருமான தற்போதைய தமிழ்கூட்டமைப்பு பா. சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்.

பதவிக்காக மண்டியிட்டு தமிழ் கூட்டமைப்பில் இணைந்தவர்தான் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் என்ற ஒடுகாலி. இவரை தமிழ்கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்கட்சிகள் விரும்பாதபோதும், மற்றுமொரு ஒடுகாலியான செல்வம் அடைக்கலநாதனின் காலில் விழுந்து மண்டியிட்டு; கூட்டமைப்பில் இணைந்து கொண்டவர்தான் இந்த சுரேஷ்.

.பி.ஆர்.எல்.எவ் பொது செயலர் அமரர் பத்மநாபா கொலைக்கு பிரதான காரணியாக இருந்தவரே இந்த பிரேமச்சந்திரன். அதன் நண்றிக்கடனாகவே பின்னர் புலிகளுடன் இணைந்து அவர்களுக்க சேவகம் செய்தவர். இன்று மற்றைய தமிழ்கட்சிகளை பார்த்து அரசுடன் மென்மைபோக்கு கடைப்பிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு சொல்வதற்கு இவருக்கு எந்த தகுதியும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் இந்தியாவிலம் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் இருந்துவிட்டு உள்ளாட்சி தேர்தலுக்காக மஹிந்தவின் காலில் மண்டியிட்டு வந்தவர்தான் இந்த குறும் நோக்கம் கொண்டவர்தான் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். வன்னியில் அகோர யுத்தம்; இடம்பெற்ற நிலையில் சொத்துக்களையும்,
சொந்தங்களையும் இழந்த நிலையில் வவுனியா நோக்கிவந்த அந்த மக்களுக்காக ஒரு போத்தல் தண்ணீரோ அல்லது ஒரு நேர உணவு கூட கொடுக்க வக்கில்லாத இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். மக்களின் அவலத்தில் அல்லும் பகலும் பக்கதுணையாய் இருந்து செயற்பட்ட தமிழ்கட்சிகளான புளொட் போன்ற கட்சிகளை விமர்சிப்பதற்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் நடாத்தும் கோடரிகாம்புக்கு எந்த முகாந்திரையும்
கிடையாது.

வசதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்வதும், சொத்து சேகரித்து கொள்வதுமே இவரது கொள்கை. இந்தியாவில் பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது துணைவியார் ஆனந்தி பெயரில் தமிழகத்தில் இருந்த வீட்டினை போலி கையெழுத்து போட்டு வித்தவர் இந்த சுரேஸ் ஆவர்.

இந்திய பெண்மணியாக ஆனந்தி அவர்கள் இருந்தபோதும், பத்மநாபா பெயரில் அறக்கட்டளை அமைப்பை கட்டியமைப்பதற்காகவே மேற்படி வீட்டை ஆனந்தி அவர்கள் வைத்திருந்தார். இந்நிலையில்தான் மேற்படி வீட்டை சுரேஸ் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்டார். கண்ணியமான பெண்மணியாக இருந்தபடியால் ஆனந்தி அவர்கள் சட்டநடவடிக்கை எடுக்க கூடிய நிலையில் இருந்தும் தனது கண்ணியத்தை
வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டுமல்ல கொழும்பு வத்தளை பகுதியில் உள்ள .பி;ஆர்.எல்.எவ் அமைப்பின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை கபளீகரம் செய்து கொண்டவர்தான் இந்த சுரேஸ் என்ற சுரெஸ் பிரேமச்சந்திரன்.

இதுமட்டுமா கடந்த உள்ளாட்சி தேர்தல் நிதியாக வெளிநாடுகளில் இருந்து புலிகளால் அனுப்பி வைக்கப்பட்ட 1 கோடி ரூபாயில் சிறு தொகையை தமிழ்கூட்டமைப்புக்கு செலவழித்துவிட்டு மிகுதி நிதியை தனது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டவர்தான் இந்த ஈனப்பிறவி சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இவருக்கு தமிழ்மக்களின் விடுதலை பற்றியோ புலிகளின் போராட்டத்தை குறைகூறுவதற்கோ அல்லது மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்தவித அடிப்படை தகுதியுமற்றவர். தமிழ் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகி இவர் மக்களுக்கு செய்த சேவை என்றால். மனைவி பிள்ளையை கனடாவுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அங்கே அவர்களுக்கு நிரந்தர
வதிவிடவுரிமையயை பெற்றுகொண்டு பின்னர் இந்தியாவுக்கு அழைத்து முன்னைநாள் இந்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மூலம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியில் மகளுக்கு அனுமதி பெற்றதுதான் இவர் பாராளுமன்ற உறுப்பினராகியதன் பலன்.


குருபரன்
பிரித்தானியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக