31 அக்டோபர், 2009

பாகிஸ்தானுக்கு ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை நிதி உதவியாக வழங்க அமெரிக்கா இணக்கம்

பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு க்கான இராணுவ நிதி உதவியாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை அமெ ரிக்கா வழங்க இருக்கிறது. இதற் கான அனுமதியை அமெரிக்க ஜனா திபதி ஒபாமா வழங்கி இருக்கிறார்.

அமெரிக்க இராணுவத்துக்கு 2010 ஆம் ஆண்டுக்கான 34 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் மசோதா வில் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இந்த பட்ஜெட் டில் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்குவதற்காகவும் நிதி ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி யாக 11,500 கோடி ரூபாய் வழங்கு வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதற்கும் சேர்த்துத்தான் அவர் அனுமதி கொடுத்து இருக் கிறார்.

இந்த உதவியில் 2 அம்சங்கள் உள் ளன. ஒன்று, கூட்டணி ஆதரவு நிதி, 2 வது தீவிரவாத தடுப்பு நிதி. கூட் டணி ஆதரவு நிதி என்பது கடந்த காலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவ தற்காக பாகிஸ்தான் செலவழித்த தொகையை ஈடுகட்டும் வகையில் வழங்கப்படுவது. இதற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடுத்தது தீவிரவாதத்தை ஒடுக் குவதற்காக அமெரிக்கா அளிக்கும் நிதி ஆகும். இதற்காக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த நிதியை வழங்குவதோடு அதைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையையும் அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்காக (இந்தியா வுக்கு எதிரான இராணுவ நடவடிக் கைக்காக ஆயுதங்களை குவிப்பதற் காக) திசை திருப்பக்கூ¡டது. அதன் மூலம் இராணுவ சமன்நிலை பிறழ வகை செய்யக்கூடாது என்பது அதன் நிபந்தனை ஆகும்.

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அந்த நாடு, இந்தியா வுக்கு எதிரான போருக்காக மரபு ரீதியான ஆயுதங்களை வாங்கி குவி ப்பதற்காக பாகிஸ்தான் பயன்படுத் துவதாக இந்தியா கருதுகிறது. இந் தியாவின் இந்த அச்சத்தை கருத்தில் கொண்டு தான் இந்த நிபந்த னையை அமெரிக்கா சேர்த்துள்ளது.

இந்தியாவின் அச்சம் நியாயமானது தான் என்பதை பாகிஸ்தானின் முன் னாள் ஜனாதிபதி முஷர்ரப்பின் சமீ பத்திய பேட்டி உறுதிப்படுத்தி உள் ளது. தன் பதவிக்காலத்தில் அமெரி க்கா கொடுத்த நிதி உதவியைக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிபந்தனையை பாகிஸ்தான் கடைப்பிடிப்பதோடு மட்டும் அல் லாமல், நிதி திசை திருப்பப்படவி ல்லை என்று ஜனாதிபதி ஒபாமா நட்சாட்சி பத்திரம் கொடுத்தால் தான் பாகிஸ்தானுக்கு பணம் கிடைக்கும்.

180 நாட்களுக்கு ஒருமுறை இந்த பணம் பாகிஸ்தானுக்கு கிடைப்ப தற்கு முன்பாக இராணுவ மந்திரி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது என்றும் சான்றிதழ் வழங்க வேண்டும். அதோடு ஜனாதிபதி ஒபாமாவும் 180 நாட்களுக்கு ஒரு முறை பணம் சரியாகத்தான் செலவழிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக