27 அக்டோபர், 2009

மனித உரிமை-பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-ரஷ்யா இடையில் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
ஆந்திர எல்லையோர பகுதியில் 17

இலங்கை மீனவர்கள் கைது











ஆந்திர எல்லையோர பகுதியில் 17

இலங்கை மீனவர்கள் கைது


கடலோர காவல் படையினர் ஆந்திர எல்லையோர பகுதியில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 17 பேரைக் கைது செய்தனர்.

கைதான 17 பேரும் 3 படகுகளில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவர் எனவும் அவர்களிடம் இருந்து 1500 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

கைதான இலங்கை மீனவர்கள் 17 பேரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இன்று இது தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகம தெரிவித்தார்.

மேற்படி வைபவம் இன்று காலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மனித உரிமை என்பன தொடர்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி வி. லவ்ரோவ் உடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக