27 பிப்ரவரி, 2010



ஜெயிலில் இருந்தபடியே பாராளுமன்ற தேர்தலில் பொன்சேகா போட்டி மனு தாக்கல் செய்யப்பட்டது




இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராணுவ தளபதி பொன்சேகா, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தற்போது ஜெயிலில் இருக்கிறார். அவர் ஜெயிலில் இருந்தபடியே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

59 வயதான பொன்சேகா, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற தொகுதியில், ஜனநாயக தேசிய கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் ஜெயிலில் இருப்பதால், அவரது மனுவை, அவர் சார்பில் ஜனநாயக தேசிய கூட்டணியின் பொது செயலாளர் விஜிதா ஹெராத், தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக