27 பிப்ரவரி, 2010

மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாக மாத்தளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இரத்தோட்டை வீதிச் சோதனைச் சாவடியில் கடமையில் இருக்கும் பொலீசார் அவ்வழியே வந்த வேன் ஒன்றினை நிறுத்த முற்பட்டபோது அந்த வேன் பொலீசாரின் தடையையும் மீறிச்சென்ற நிலையில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வேனில் பயணித்தவர்களில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தளைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக