27 பிப்ரவரி, 2010

ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ்



ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் வெற்றிலைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றது. இதனடிப்படையில் அக்கட்சியின் தலைமை வேட்பாளராக அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா போட்டியிட அதன்கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், உதயன், சிறீரங்கேஸ்வரன், கமலேந்திரன், சார்ள்ஸ், சிறீதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேவேளை வன்னியில் ஈ.பி.டி.பி தமது வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அங்கு அந்தக்கட்சி ஒன்பதுபேரைக் கொண்ட வேட்புமனுவை இன்று சமர்ப்பித்துள்ளது. இதேவேளை ஈரோஸ் வவுனியாவில் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் தலைமை வேட்பாளர் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. இதுபோல் திருமலையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.

1 கருத்து: