27 பிப்ரவரி, 2010

மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல்!

தமிழ் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் முன்னைநாள் “மண்டையன் குழுவின்” தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு வான் ஒன்றில் சென்ற குழுவினரே கற்களைவீசியும், சாணிகள், துர்நாற்றம் வீசும் பொருட்களையும் வீசியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1988-1990 களில் வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்களிற்கு காரணமான சுரேஸ் பிரேமசந்திரன் மண்டையன் குழு என்ற பெயரில் யாழ்குடாநாட்டில் பல்வேறு அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தவர் ஆவர், பின்னர் புலிகளுடன் கொண்டிருந்த இரகசிய ஒப்பந்தம் காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் பத்மநாபா தமிழகத்தில் வைத்து புலிகள் படுகொலை செய்வதற்கு இவரே பின்னிருந்து செயற்பட்டவர். அதன் நன்றிக்கடனுக்காகவே தகுதியில்லாத சுரேஸ் பிரேமசந்திரனுக்கு புலிகள் இவருக்கு தமிழ் கூட்டமைப்பில் பாராளுமன்ற அங்கத்துவம் வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக