27 பிப்ரவரி, 2010

புத்தளத்தில் 15 அரசியல் கட்சிகள் - 12 சுயேட்சைக் குழுக்கள் போட்டி



நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவென 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் 12 சயேட்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகப் புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.

எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இத்தேர்தலில் 297 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய இலங்கை முன்னணி, ஜனநாய தேசியக் கூட்டமைப்பு, இடதுசாரி விடுதலை முன்னணி, ஐக்கிய இலங்கை மகா சபாவ, ஐக்கிய ஜனநாயக முன்னணி, புதிய சிகல உறுமய, ஐக்கிய தேசிய மாற்று முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, ஸ்ரீலங்கா தேசிய முன்னணி, சிங்கள மகா பூமி புத்ரா கட்சி, தேசப்பற்று தேசிய முன்னணி, மக்கள் முன்னணி, அனைவரும் நாட்டு மக்கள், அனைவரும் அரசர் கட்சி ஆகியன போட்டியிடுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக