27 பிப்ரவரி, 2010

அமெரிக்க தாக்குதலில், தலிபான் தளபதி பலி
தலைக்கு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டவன்



தலிபான் தீவிரவாதிகள் அதிக நடமாட்டமுள்ள பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத போர் விமானங்கள் அவ்வப்போது, ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த புதன் கிழமை இதேபோல் தெற்கு வசிரிஸ்தானின் தர்கா மண்டி பகுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் குவாரி முகமது ஜாபர் என்னும் தலிபான் தீவிரவாத இயக்கத் தளபதி உள்பட 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முகமது ஜாபர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவன் என்பதும், இவனது தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக