27 பிப்ரவரி, 2010

40வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல் ஒன்றின்பாகங்களை சட்டவிரோதமான



40வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல் ஒன்றின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட முயற்சி பொலீசாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. கல்முனை கடற்பரப்பிலுள்ள இந்தக் கப்பலின் உதிரப்பாகங்களை அகற்றி விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனினும் இதுபற்றி அம்பாறை பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தக் கப்பலிலிருந்த காற்றுமானியை அகற்றி கரைக்கு எடுத்து வந்தவேளை அவர்களை கைதுசெய்ய முயற்சித்தநிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். எனினும் அந்தக் காற்றுமானியை எடுத்துச் செல்லவிருந்த லொறியின் சாரதியை பொலீசார் கைதுசெய்துள்ளனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக