27 பிப்ரவரி, 2010

வன்னி மாவட்டத்தில்
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, .என்.டி.எல்.எப். நிராகரிப்பு



வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவத ற்கென விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியும், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜவரு ஆகியன தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நேற்று நிராகரிப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த யோகரட்ணம் யோகி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியும் நேற்றுக் காலை 11.56 மணியளவில் வேட்புமனுவை தாக்கல் செய்தது. ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் நேற்று முன்தினம் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தது.

இவ்விரு கட்சிகளிலும் இருளன் ஜெயந்தி என்பவரது பெயரே முதன்மை வேட்பாளராக குறிப்பிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் கட்சியின் செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை.

இவற்றின் காரணமாக இரண்டு கட்சிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக