27 பிப்ரவரி, 2010


தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர்


தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர் முன்வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாட்சிகூற முன்வந்தவர்களிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுமதியளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சரத்பொன்சேகா அவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த மறுத்துள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாமீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இராணுவ சட்டங்களின்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக