18 ஏப்ரல், 2010

கும்புறுபிட்டிய வாக்குகள் எண்ணும் பணி திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றம்;புலிகளின் அச்சுறுத்தல் காரணமாம்


திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டியவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள மீள்வாக்குப் பதிவின் பின்னரான வாக்கு எண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் பணியினையும் மேற்கொள்வதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் அச்சுறுத்தல் இந்தப் பிரதேசத்தில் இருக்கலாமென்ற காரணத்தால் பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே வாக்குகள் எண்ணும் பணியை திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றுவதென முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கும்புறுப்பிட்டிய வாக்குச் சாவடியில் வாக்களிப்பு மட்டுமே இடம்பெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் திருகோணமலை மாவட்ட செயலகத்திலிருந்தே அறிவிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக