18 ஏப்ரல், 2010

இங்கிலாந்தில் மாணவிகள் அறையில் காமிரா பொருத்திய ஆசிரியர்





இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரை சேர்ந்தவர் பால்வாங். இவர் பிர்மிங்காம் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது வீட்டில் 6 மாணவிகள் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் பகுதியில் பால்வாங் 2 ரகசிய காமிராக்களை மறைவாக பொருத்தியிருந்தார். இதை கண்டுபிடித்த மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

அவர் மீது பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் தான் கெட்ட நோக்கத்தில் காமிராவை பொருத்தவில்லை. மாணவிகளின் நடவடிக்கையை கண்காணிக்கவே அவ்வாறு செய்தேன் என தெரிவித்தார்.

இருந்தாலும் அவரது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ரோடரிக் ஹெண்டர்சன் குற்றம் சாட்டப்பட்ட பால்வாங் மீது செக்ஸ் குற்றம் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக