18 ஏப்ரல், 2010

ஈரான் பிரச்னைக்கு பொருளாதாரத் தடை தீர்வல்ல: "பிரிக்' கருத்து



ஈரான் மீது புதிதாக பொருளாதார தடை விதிப்பது பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. இதை தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் தீர்க்க முடியும் என்றுபிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

பிரேஸில் தலைநகர் பிரெஸிலியாவில் நடைபெற்ற இரண்டாவது "பிரிக்' நாடுகளின் கூட்டத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் ஈரான் மீது தடை விதிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் "பிரிக்' நாடுகளின் கூட்டமைப்பில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரேஸில் அதிபர் லூயி டி சில்வா ஆகியோரிடம் இந்த விஷயம் குறித்து விவாதித்தார். இந்த விஷயத்தில் நான்கு நாடுகளின் தலைவர்களின்கருத்துகளும் ஒரே மாதிரியாக இருந்தது.

அனைத்துத் தலைவர்களுமே, பொருளாதார தடை மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையாது என்று தெரிவித்தனர். இத்தகைய பொருளாதார தடை விதிப்பால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அதேசமயம் வசதி படைத்தவர்கள் மத்தியில் இந்த தடைவிதிப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

வெளிப்படையான, அதேசமயம் திறந்த மனதுடன் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது தடை விதிப்பது தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு ஈரான் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது என்று மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருகிறது. ஆனால் உலக நாடுகளோ, அணுகுண்டு தயாரிப்புக்குத்தான் இதை ஈரான் பயன்படுத்துகிறது என சந்தேகிக்கின்றன. பொருளாதார தடை விதிப்பதன் மூலம் அந்நாடு அணுகுண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்த முடியும் என உலக நாடுகள் கருதுகின்றன.

ஆனால் புதிய பொருளாதார தடை விதிப்பை இந்தியா ஆதரிக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவாகக் கூறிவிட்டார். புதிதாக விதிக்கப்படும் தடையில், நிதி புழக்கம் கட்டுப்படுத்தப்படுமே தவிர, பொருள்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றே தோன்றுகிறது.

ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பான அறிக்கையை ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கொண்டு வந்தது. இது தொடர்பான அறிக்கை தற்போது சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 5 நிரந்தரஉறுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக