18 ஏப்ரல், 2010

இலங்கை பார்லி வளாகத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனை

கொழும்பு:இலங்கையில் பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், புதிய கூட்டத்தொடர் துவங்கவுள்ளதை அடுத்து, பார்லிமென்ட் வளாகத்தில் புத்த துறவிகள் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளனர்.இலங்கையில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷே கட்சி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும் என்பதால், முதல் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது.இதையொட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் இன்றிரவு, ஏராளமான புத்த துறவிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளனர். இந்த பிரார்த்தனையில், பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிபர் ராஜபக்ஷேவின் ஒப்புதலுடன், இந்த பிரார்த்தனை கூட்டம் நடக்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக