18 ஏப்ரல், 2010

தமிழ்பேசும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்தில் அரசிற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

தமிழ்பேசும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் கருத்துரைக்கையில், அரசியல் யாப்பில் திருத்தம் செய்து தமிழ்பேசும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைத் தருவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காக அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைக் கோரும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் அதனைப்பற்றி கட்சியின் உயர்பீடம் கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்பதற்கும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக