18 ஏப்ரல், 2010

வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்காக பிரித்தானியா நிதியுதவி






வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கென பிரித்தானிய அரசாங்கம் 02 கோடிரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் பிரித்தானிய அரசினால் இலங்கைக்கு 25கோடி ரூபா நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் பீற்றர் ஹவுன்ஸ் தெரிவித்துள்ளார். நிதியுதவி தவிர மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கென உபகரணங்களையும் பிரித்தானியா வழங்கவுள்ளதென்று பீற்றர் ஹவுன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக