18 ஏப்ரல், 2010

பெங்களூர் கிரிக்கெட் மைதானம் அருகே 2 இடங்களில் குண்டுவெடிப்பு






குண்டு வெடித்ததில் சேதமடைந்த பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானசுற்றுச்சுவர்.
பெங்களூர், ஏப்.17: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மைதானத்தை அடுத்த போலீஸ் வயர்லெஸ் தலைமை அலுவலகம் அருகே சனிக்கிழமை வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்ததில் போலீஸ்காரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன் அணிக்குமிடையே போட்டி நடைபெறவிருந்தது. போட்டி மாலை 4 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கிரிக்கெட் மைதானத்தின் அனைத்து வாசல் வழியாகவும் ரசிகர்கள் பிற்பகல் 2 மணி முதலே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். போலீஸக்ஷ்ரும், தனியார் பாதுகாப்பு வீரர்களும் இப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அனில் கும்ப்ளே சர்க்கிள் மற்றும் 12-வது கேட் வழியாக செல்ல ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களது டிக்கெட்டை பரிசோதித்து அவர்களை போலீஸக்ஷ்ர் உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பிற்பகல் 3.15 மணி அளவில் 12-வது கேட் பகுதியில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் ரசிகர்களும், பாதுகாப்புக்கு நின்ற போலீஸக்ஷ்ரும் கூச்சலிட்டபடி சிதறி ஓடினர்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கிரிக்கெட் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நின்றிருந்த போலீஸக்ஷ்ர் உடனடியாக சப்தம் கேட்ட பகுதிக்கு ஓடிவந்தனர். இதற்குள் மற்றொரு பகுதியில் குண்டு வெடித்தது. அந்த குண்டு அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகேயுள்ள கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள போலீஸ் வயர்லெஸ் பிரிவு தலைமை அலுவலகம் அருகே செடிகளுக்கு இடையில் வெடித்து சிதறியது.

கேட் அருகே வெடித்த குண்டால் பலர் காயமடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக தயாராக இருந்த தீயணைப்புப் படை வீரர்களும், போலீஸக்ஷ்ரும் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அனைவரும் மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் செக்யூரிட்டி காவலர் ஒருவரும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த குண்டு கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே உள்ள சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த குண்டு வெடித்ததால் சுவர் வெடித்து நாலாபுறமும் சிதறியது. சம்பவ இடத்துக்கு துப்பறியும் போலீஸ் நாய் கொண்டுவரப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

வெடித்த குண்டு அதிக சக்தி இல்லாத குண்டாக இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதுபோல் போலீஸ் வயர்லெஸ் பிரிவு அருகே வெடித்த குண்டால் யாரும் காயம் அடையவில்லை.

இச்சம்பவத்தால் கிரிக்கெட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குண்டு வெடித்தபோது கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் டிரஸ்சிங் அறையில் இருந்தனர். குண்டு வெடித்ததில் கிரிக்கெட் மைதானத்தின் சுவர் பலத்த சேதமடைந்தது.

குண்டுகள் வெடிப்பால் கிரிக்கெட் மைதானம் முழுவதும் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது. போலீஸக்ஷ்ர் தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினர்.

வெடிக்காத குண்டு கண்டெடுப்பு

8-வது கேட்டில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. மைதானத்தின் நாலாபுறமும் வேறு குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்த போலீஸக்ஷ்ர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மைதானத்தைச் சுற்றி சோதனை நடத்தியபோது 8-வது கேட் அருகே வெடிகுண்டு போன்ற பொருள் கிடப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதை செயல் இழக்கச் செய்யும் முயற்சியில் போலீஸக்ஷ்ர் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கிடந்த பார்சலை மெதுவாக எடுத்து அதை செயல் இழக்கச் செய்தனர்.

8-வது கேட்டில் கண்டெடுக்கப்பட்டது டைமர் டிவைஸ் என்று தெரியவந்தது. மேலும் குண்டு வெடித்த 12-வது கேட் அருகே கிடந்த வயர்கள், நட்டு மற்றும் போல்டுகளை ராணுவ வீரர்கள் கண்டெடுத்தனர். அனில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் இருந்தும் வயர்கள், டைமர் கண்டெடுக்கப்பட்டது. இதனால் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நகர காவல் துறை ஆணையர் சங்கர் பிதரியிடம் கேட்டபோது அவர் கூறியது: 8-வது கேட்டில் மீட்கப்பட்ட பொருள் வெடிகுண்டா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. போலீஸக்ஷ்ர் சரியாக செயல்படாததால் இந்தச் சம்பவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக