18 ஏப்ரல், 2010

ஜெனரல் சரத்பொன்சேகா நாடாளுமன்றம் செல்ல பாதுகாப்பமைச்சின் அனுமதி அவசியமில்லையென ஜே.வி.பி தெரிவிப்பு





ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கான முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார். எனினும், தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜெனரல் சரத்பென்சேகாவின் பெயரையும் வர்த்தமானியில் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக