18 ஏப்ரல், 2010

யாழ். உறவுகளைத் தேடி... 4 மாதங்களுக்குள் 40 இலட்சம் பேர் யாழ். விஜயம்

நான்கு மாதகால இடைவெளிக்குள் சுமார் 40 இலட்சம் பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்களென யாழ். மாவட்டத்திற்கான பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

சுண்ணாகம் மருதனாமடுவில் நேற்று தமிழ்- சிங்கள புத்தாண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது.

யாழ். மாவட்டத்திலுள்ள 99 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களோடு சிங்கள மக்களும் பெருமளவில் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு ஆரம்பமான இந்த புத்தாண்டு விழாவில் விளையாட்டு க்களோடு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க;

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நேற்று வரைக்கும் யாழ். குடா நாட்டிற்கு 40 இலட்சம் பேர் விஜயம் செய்துள்ளனர். வருகை தந்தோரில் இன்னும் இரண்டு இலட்சம் பேர் இங்கு தங்கியிருந்து யாழ். குடாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகின்றனர். வருகின்ற மக்கள் ஹோட்டல்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

யாழ். குடாநாட்டை பார்வையிடுவதற்காக மக்கள் திரண்டு வருகிறார்கள் என்பதைவிட, தங்களது உறவுகளைத் தேடிவருகிறார்கள் என்பதே உண்மை” என அவர் கூறினார்.

யாழ். குடா நாட்டு அபிவிருத்தி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம், பொது மக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் நல்லெண் ணத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே புத்தாண்டு விளையாட்டு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

இதேநேரம், வடமராட்சி கிழக்கு பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும், ஓகஸ்ட் மாதம் பூர்த்தியடை ந்துவிடும். அதன்பின்னர் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல மக்கள் அனுமதிக் கப்படுவர் எனக் குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு வலயங்களாகக் கருதப்படும் இடங்களும், சில முகாம்களும் அகற்றப்பட்டு விடுமெனவும் சுட்டிக்காட்டி னார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக