27 மார்ச், 2010

இரணைமடு விமான ஓடுபாதையை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க நடவடிக்கை





புலிகளால் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதையினை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவைகளைக் கொண்ட தொகுதியாக நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம் வடமாகாணத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டமாக அமையுமென்று நம்பப்படுகிறது. புலிகள் அப்பகுதியில் இருந்தகாலத்தில் இரணைமடுகுளத்தை அண்டிய அடர்ந்த வனப்பகுதியில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. உத்தேச விமான நிலையத் தொகுதியில் விமான சேவைகள் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையங்கள் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் உத்தேச முதலீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதியில் மீன்பிடியினைக் கருத்திற் கொண்டு நவீன தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்ட நிலையமொன்றை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக