27 மார்ச், 2010

கொழும்பிலுள்ள ஏனைய ஓடைகளிலும் படகுச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை


கொழும்பிலுள்ள மேலும் சில ஓடைகளில் படகுச் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கடற்படையினர் கவனம் செலுத்தியுள்ளனர். இதன் பிரகாரம் புனித செபஸ்ரியன் ஓடை, தியவன்னா குடா, தெகிவளை ஓடை, பேலியகொட ஓடை மற்றும் ஹீனெல ஆகியவற்றின் ஊடாக படகுச் சேவைகளை ஆரம்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே இந்தப் படகு சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெள்ளவத்தையின் கிருலப்பனை ஓடையில் கடற்படையினரின் படகுசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை இந்த படகுச்சேவை இடம்பெற்று வருவதாகவும் கெப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். ஏனைய ஓடைகளிலும் படகு சேவைகளை ஆரம்பிப்பதற்காக ஓடைகளை சுத்திகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படகு சேவைகளை சீராக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் ஓடைகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறு அதன் இரு புறங்களிலும் வாழும் மக்களிடம் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக