27 மார்ச், 2010

யாழ். வணிகர் சங்கக் கண்காட்சி இன்று ஆரம்பம்




யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாண வணிகர் கழகம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், யாழ். மத்திய கல்லூரியிலும் ஆரம்பமாகிறது.

இக்கண்காட்சியில் யாழ்ப்பாண உள்ளூர் உற்பத்திப் பொருட்களுடன் தென்னிலங்கை வர்த்தகர்களின் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

வர்த்தகக் கண்காட்சியை யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆரம்பித்து வைக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக