27 மார்ச், 2010

மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு.வில் இணைவு






திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு வில் இணைந்துள் ளனர்.

ரீ.எம்.வி.பி. வேட் பாளர்களான காத்தமுத்து கணேஸ், ஜெயரட்ணம் நேசராசா மற்றும் ஈரோஸ் வேட்பாளரான த. இராசலிங்கம் ஆகியோரே அரசுடன் இணைந்து கொண்டவர்களாவர்.

ஐ.ம.சு.மு. தமிழ் வேட்பாளர் கு. இனியபாரதிக்கு ஆதரவு தெரிவித்தே இவர்கள் இணைந்து கொண்டனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் எஸ். பன்னீர்செல்வமும் ஆளும் கட்சி வேட்பாளர் இனியபாரதியுடன் இணைந்துகொண்டுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக