27 மார்ச், 2010

எதிர்க்கட்சிக்குத் தாவிய யோகராஜன்மீது இ.தொ.கா. ஆதரவாளர்கள் தாக்குதல்

ஐக்கியத் தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் நேற்றுமாலை ஹட்டன் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில், இ.தொ.கா. ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆர்.யோகராஜன் சிறு காயங்களுக்குள்ளானதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்துவந்த ஆர்.யோகராஜன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சித் தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக