27 மார்ச், 2010

விவசாயியின் வயிற்றில் 500 கிராம் எடையில் கல்! : மகியங்கனையில் சம்பவம்



விவசாயி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து சுமார் 500கிராம் எடையுள்ள கல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று மகியங்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

எச்.எம்.ஆரியசேன (வயது 43) என்பவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுநீரகத்தில் கல் இருப்பதனை உறுதி செய்தனர்.

இவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வேளை, வைத்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் 26 சென்றி மீற்றர் சுற்றளவுடைய கல் இருந்தமை தெரிய வந்துள்ளது.

மகியங்கனை வைத்தியசாலையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம்பெற்றது இதுவே முதல் தடைவ என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக