27 மார்ச், 2010

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் பிரதிபலன்களை 2012இல் பெறலாம்




ஜா-எலயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ



இன, மதங்களுக்கிடையிலான அமைதியும் ஒற்றுமையும் அபிவிருத்தி யுகத்துக்கு மிக முக்கியமானதாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாம் நாட்டை ஐக்கியப்படுத்தியது போன்றே இன, மத பேதமின்றி சகல மக்களையும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ வைப்போம். அதற்கான பொறுப்பினையும் ஏற்றுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக மேற் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங் களின் பிரதிபலன்களை 2012ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்த ஜனாதிபதி; எதிர்கால அபிவிருத்திக்காக இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் ஜா - எல பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டி. எம். ஜயரத்ன, பீலிக்ஸ் பெரேரா, ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ, சரத்குமார குணரத்ன, ஜனாதி பதியின் ஆலோசகரும் வேட்பாளருமான பெஷில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இப்பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகை யில் :-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று நான் அமோக வெற்றிபெற பாரிய பங்களிப்புச் செய்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதற்கு இச்சந்தர்ப் பத்தினைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அத்துடன் நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் என்னைச்

சிறையிலடைப்பதற்கும் மண்ணுக்கே அனுப்புவதற்கும் சதிகள் மேற்கொள்ள ப்பட்டிருந்தன. இந்த வெற்றியின் மூலம் அத்தகைய நிலையிலிருந்து என்னைப் பாதுகாத்தமைக்காகவும் நான் மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

2005ம் ஆண்டு நான் மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்து தேர்தலில் நின்றபோது இந்த நாட்டை மீட்டுத்தருமாறு மக்கள் கோரினர்.

அப்போது இந்த நாட்டில் சிங்கப்பூரைப் போன்ற இருபது மடங்குப் பிரதேசம் பயங்கரவாதிகளிடமே இருந்தது. அதனை நாம் மீட்டோம்.

நாட்டு மக்கள் அனைவரதும் மனங்களை ஒன்றுதிரட்டு அதனை நாம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் எனக் கூறத் தயங்கிய தலைவர்கள் போலல்லாது பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என அழைப்பதற்குப் பழகினோம். இத்தகைய சூழலிலே நாம் பயங்கரவாதத்திடமிருந்து தாய்நாட்டை மீட்டு அதனை அபிவிருத்திக்கு உட்படு த்தினோம்.

முதல் தடவையாக 45,000 பட்டதாரிகளுக்குத் தொழில் வாய்ப்பினை வழங்கியதுடன் அரச சேவை ஊழியர்களை 12 இலட்ச மாக்கவும் முடிந்தது. இதன் பிரதிபலனை நாம் இப்போது காண முடிகின்றது. கடந்த தேர்தலைப் போலவே இம்முறை தேர்தலிலும் 75 வீத அரச ஊழியர்கள் எமக்கே வாக்களித்துள்ளனர்.

நாட்டின் மின் உற்பத்தித் துறையை மேம்படுத்தினோம். பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல மணித்தியாலய மின் துண்டிப்பு தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற போதிலும் இங்கு அவ்வாறி ல்லை. மின் உற்பத்தி நிலையங்கள், துறை முகங்கள், மேம்பாலங்கள் நெடுஞ்சாலைகள் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் பிரதிபலன்களை 2012ம் ஆண்டில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்கால சந்ததியினருக்காகவே இத்தகைய திட்டங்களை முன்னெடுத்துள் ளோம். இதன் மூலம் நாட்டின் பொரு ளாதாரத்தில் பெரும் பலனை நாம் எதிர்காலத்தில் பெற முடியும். இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலேயே நாம் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தோம். அதன் பிரதிபலன் மக்களை வந்து சேரும் யுகம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இத்தகைய திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மக்களின் ஆதரவு எமக்கு அவசியம்.

நாம் நாட்டை ஒன்றிணைத்தது போன்றே சகல இன, மத மக்களையும் சகல உரி மைகளுடனும் சுதந்திரத்துடனும் வாழ வைப்பதும் எமது பொறுப்பாகும். அதே போன்று அவரவரது மத வழிபாடுகளுக் கான உரிமைகளை வழங்குவதும் எமது பொறுப்பு, அதனை நாம் நிறைவேற்று வோம். இன, மதங்களுக்கிடையிலான அமைதியும் ஒற்றுமையும் நாட்டின் அபிவிருத்தி யுகத்துக்கு மிக முக்கியமானது. அதேபோன்று வினைத்திறனுள்ள அரசியல் தலைவர்களை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும். அதற்காக நாம் அனைவ ரும் ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக